‘மன்னாரு’ பாடலின் மூலம் இசைப்பயணத்தை தொடங்கும் ரகிட என்டர்டெயின்மென்ட்!

தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர்.

இந்தப் பாடலை, தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து பாடியுள்ளார் மற்றும் கென் ராய்சன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.

மேலும், மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்த ‘மன்னாரு’ பாடல், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆகஸ்ட் 8 இன்று முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது.

இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *