நாளை உலகமெங்கும் வெளியாகும் கிரிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’!

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி (The Odyssey)’ என்பது முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாகும். முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை, இப்படம் உலகளாவிய திரைகளுக்குக் கொண்டு வருகிறது.

நோலனின் முந்தைய படைப்புகளான ‘தி டார்க் நைட்’ முத்தொகுப்பு, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து, 6 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இந்த வருடத்தின் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படமாகும்! இது நோலனின் 13 ஆவது முழுநீளத் திரைப்படமாகும். மேலும் இது பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கவுள்ளது.

கதைச்சுருக்கம் – இத்தாகா (Ithaca) என்ற பாறைகள் நிறைந்த கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், தனது புகழ்பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ தந்திரத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்பும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்களாலும், அசுரர்களாலும், பெரும் புயல்களாலும், பேரழிவு நிகழ்வுகளாலும் இடையூறு ஏற்படுகிறது. இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாயார் பெனிலோப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது. தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு டெலிமக்கஸ் அவரைத் தேடுகிறான். அதே நேரத்தில், ஓநாய்களைப் போன்ற கொடூர குணம் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒடிசியஸ் திரும்புவார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டு, தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பைத் தொடர்ந்து வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.

ஏற்கனவே திரையிடப்பட்ட பிரீமியர் காட்சிகள் அனைத்திலுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நாளை உலகமெங்கும் வெளியாகும் கிரிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *