ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் “கோழிப்பண்ணை செல்லதுரை”!

அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, பிரிகிடா சகா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார், ஆகியோர் நடித்து என். ஆர்.ரகுநந்தன் இசையில் அசோக் குமாரின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.

செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் இத்திருவிழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது.

22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இது வரை தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக, இரு நாள் முன்பாக அமெரிக்காவில் புகழ் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *