‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை பாராட்டிய கனிமொழி கருணாநிதி MP!

திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு, தற்போது மற்றொரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு, படக்குழுவினரை நெஞ்சாரப் பாராட்டியுள்ளார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதையை மிக அழுத்தமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் திரையில் கொண்டு வந்ததற்காக படக்குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான நடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான இயக்கம் ஆகியவை தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், இத்திரைப்படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

திரையிடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி., “சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இன்னும் பெருவாரியான மக்களைச் சென்றடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

தணிக்கைக் குழுவின் மூலம் ‘U/A’ சான்றிதழ் பெற்று, ரிலீஸுக்கான அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிஜக் குற்றப் பின்னணியை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான கோர்ட்ரூம் க்ரைம் டிராமா (Courtroom Crime Drama) இது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பாராட்டு மற்றும் ‘U/A’ சான்றிதழ் ஆகியவை படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *