மாயாசபா: ரைஸ் ஆஃப் டைட்டன்ஸ் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கற்பனையை கவர்ந்து, ஆகஸ்ட் 11-17, 2025 வாரத்தில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளின் ஆர்மாக்ஸ் மீடியா (Ormax media) பட்டியலில் 3-வது இடத்தில் ட்ரெண்ட் செய்கிறது. 2.8 மில்லியன் பார்வைகளைப் பெற்ற இந்தத் தொடர், மே 2024 முதல் ஆர்மாக்ஸ் அனைத்து மொழி உள்ளடக்கங்களையும் சேர்க்கத் தொடங்கிய பிறகு, டாப் 3-ல் நுழைந்த முதல் தெலுங்கு நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது.
தேவா கட்டா மற்றும் கிரண் ஜெய் குமார் இணைந்து இயக்கிய மாயாசபா, உண்மையான நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட ஒரு கற்பனை சாகசமாகும், இது காகர்லா கிருஷ்ணமா நாயுடு (ஆதி பினிசெட்டி ) மற்றும் எம்.எஸ்.ராமி ரெட்டி (சைதன்ய ராவ்) இடையேயான ஆழமான நட்பை மையமாகக் கொண்டது. அவர்களின் நட்பிலிருந்து கசப்பான பகைமைக்கு மாறும் பயணம், தொடரின் உணர்ச்சிகரமான மற்றும் அரசியல் முதுகெலும்பாக உள்ளது. தேவா கட்டாவால் உருவாக்கப்பட்டு, விஜய் கிருஷ்ண லிங்கமனேனி மற்றும் ஸ்ரீ ஹர்ஷாவால் ஹிட்மென் & ப்ரோடோஸ் புரொடக்ஷன்ஸ் LLP பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்த தொடரில் திவ்யா தத்தா, சாய்குமார், நாசர், ஷத்ரு, ரவீந்திர விஜய், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
மாயாசபா: ரைஸ் ஆஃப் டைட்டன்ஸ் மூலம், சோனி லிவ் தெலுங்கு கதை சொல்லலை இந்தியாவின் ஸ்ட்ரீமிங் மையத்தில் உறுதிப்படுத்தும் ஒரு மைல்கல்லை கொண்டாடுகிறது.

