SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், தோ.சமயமுரளி திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது.
உடை மற்றும் நடவடிக்கைகளில் பெண்ணாக தோற்றத்தை மாற்றிக்கொண்ட ஒருவன் , தன் தாயை தானே கொன்றதாக போலீஸ் அதிகாரியிடம் ஒப்புக்கொள்கிறான். அந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பதை பரபரப்பாக சொல்லும் திரைப்படம் தான் சைலன்ட். புதுமையான டிரெய்லர் இப்படத்தின் கதையின் மையத்தை வெளிப்படுத்துவதுடன், படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி நடித்துள்ளார். மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், தோ.சமயமுரளி, அறம் ராம்ஸ், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சேயோன் முரளி ஒளிப்பதிவு செய்ய, சென்னை தெற்கு மண்டல ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் தோ.சமயமுரளி I.R.S இசையமைத்துள்ளார்.
“சைலண்ட்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரப்பாக நடந்து வருகிறது. படம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. SP ராஜசேதுபதி SPR பிலிம்ஸ் சார்பில் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்.