விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி – மோஹித் சூரி!

யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள சையாரா படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது .சையாரா டைட்டில் பாடலுக்கு பிறகு, ஜூபின் நௌடியல் பாடிய இரண்டாவது பாடல் பர்பாத் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘தும் ஹோ தோ’ என்கிற காதல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாடலை இன்று இந்தியாவின் மிகவும் பேசப்படும் இளம் பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலை கடந்த 12 வருடங்களாகத் தெரியும் .கல்லூரி நாட்களில் தன் படங்களில் இடம்பெற்ற ஆத்மார்த்தமான காதல் பாடல்களைக் கேட்ட பிறகு தான் விஷால் இசை கலைக்கு வர முடிவு செய்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக மோஹித் சூரி கூறியுள்ளார் .

பாலிவுட் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, நாடு முழுவதும் போற்றும் ஏராளமான மெகா ஹிட் பாடல்களை வழங்கிய மோஹித் கூறுகையில் , “விஷால் 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்ததிலிருந்து, நானும் அவரும் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம் .சரியான தருணத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.அது சையாராபடத்தில் நிகழ்ந்தது. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்லூரி நாட்களில் அவர் மனவேதனையில் இருந்தபோது, ​​எனது இசை அவரை கவர்ந்தது. உங்கள் படைப்புகள் ஒருவரின் மீது இது போன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் கேட்கும் போது, ​​அது ஒரு மிகப்பெரிய உணர்வு. இசை மக்களின் இதயங்களைத் தொடும் திறன் கொண்டது என்றும், அது மிகவும் தூய்மையான ஊடகம் என்றும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எனவே, எனது 20 ஆண்டுகால இசை இயக்கம் மற்றும் உருவாக்கத்தில், எனது பாடல்கள் மூலம் மக்களுக்கு நினைவுகளை உருவாக்கியதற்கு நான் நன்றி உள்ளவனாக உணர்கிறேன்.

விஷால் மிஸ்ரா எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் திறமையான கலைஞர்களில் ஒருவர், அவருடன் பயணிப்பது ஒரு பாக்கியம்.விஷாலின் அபாரமான திறமையால் அவரது அபார வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன் .அவரை அறிவது, அவருடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அவர் ஒரு கலைஞராக வளர்வதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தும் ஹோ தோவுடன் அவர் என் கருத்துப்படி ஒரு மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.மேலும் சையாராவின் மூன்றாவது பாடல் மூலம் அவரது இசையை விரும்புவோருக்கு, அவரது சிறந்த காதல் பாடல் இன்னும் கிடைப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

சையாரா தலைப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இது ஒரு அலைந்து திரியும் நட்சத்திரம் ,எப்போதும் பிரகாசிக்கும், எப்போதும் வழிகாட்டும், ஆனால் எப்போதும் எட்டாதது.” என இவ்வாறு கூறியுள்ளார் .

இந்த திரைப்படத்தின் மூலம் அஹான் பாண்டே ஹிந்தித் திரைப்படத் துறைக்கு ஒரு ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் . மேலும் அனீத் பத்தா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ) கதாநாயகியாக நடிக்கிறார். சையாராவை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *