கௌதம் கார்த்தி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்த மாரி செல்வராஜ்!

கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் GRK19 என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட தலைப்பு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 8.12.2025 தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

புகழ்பெற்ற திரைப்படத் இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, முழு குழுவினருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, முதல் ஷாட் கிளாப் அடித்து படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அவரது வருகை மற்றும் பாராட்டு, GRK19 குழுவினருக்கு மிகுந்த ஊக்கத்தை சேர்த்தது.

படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தங்களை வாழ்த்தியதற்கு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *