இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற பார்வையாளர்களை புயலின் மையத்துக்குள் கடத்திச் சென்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் இன் மனதைக் கொள்ளை கொள்ளும் டிரெய்லரை வெளியிட்டது. எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தத் தொடரில், கதிர் (Kathir) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க, இவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி, ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.
விருது வென்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், தமிழ்நாட்டின் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான செல்லப்பா (லால்) மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது அந்த இருண்ட சூழல் அந்த கிராமத்தையும் அந்த கிராம மக்களையும் தாண்டி எல்லைகளைக் கடந்து வெகுதூரம் அதிவேகமாகப் பரவுகிறது. மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை விடுவிக்கும் பணியில் சக்கரை (கதிர்) ஈடுபட, நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இன் இருண்ட கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு நிச்சயமற்ற எதிர்கால சிறை வாழ்வை நினைவூட்டி அவளை ஆட்டிப்படைக்கிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அவர்கள் இருவரையுமே நய வஞ்சகம், மர்மம், குற்றம், சதி மற்றும் மரணங்கள் நிறைந்த ஒரு சிக்கலான புதிருக்குள் சிக்கவைத்துவிடுவதோடு ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத 8 இளம் பெண்கள் இந்த கொலைக் குற்றம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழ, இந்தச் சிக்கலை கட்டவிழ்க்கமுடியாத ஒன்றாக மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த இருண்ட கொடூரமான கொலை நிகழ்வு அவரை முற்றிலும் அழித்துவிடும் முன்பாக இந்தக் குற்றத்தை புலன் விசாரணை செய்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும் சக்கரை, வெளிப்படையான உள் நோக்கங்கள் தனிப்பட்ட பழி வாங்கல்கள், மற்றும் கடந்த கால செயல்பாடுகளை கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்
“சுழல் – தி வோர்டெக்ஸ் முதல் சீசனுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது சீசன் பார்வையாளர்களை இன்னும் கூடுதலாக கவர்ந்திழுப்பதை உறுதி செய்ய எங்களது திறனளவு குறியெல்லையை இன்னும் சற்று உயரே அமைத்து அதை நோக்கிப் பயணித்தோம்,” என்று இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் KM. கூறினார்கள். “புஷ்கரும் காயத்ரியும் மேலும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய கதையை உருவாக்கி, அதனை அற்புதமாக வடிவமைத்து வழங்கியுள்ளனர் அதற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் நாங்கள் கவனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இயக்கியுள்ளோம். ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து கதிர் மற்றும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒரு மனதை மயக்கும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில், இயக்குநர்களாக எங்கள் பணி மிகவும் எளிதாகிவிட்டது. சுழல் – தி வோர்டெக்ஸ் உலகில் பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை மூழ்கடித்துக்கொண்டு பரவசமடைவதை காண நாங்க ஆவலோடு காத்திருக்கிறோம் மற்றும் இந்த இரண்டாவது சீசன் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு ஈர்ப்பதாக உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
“தமிழ் கதைசொல்லலில் புரட்சிகரமான ஒரு புதிய பாணியை கடைப்பிடித்து நமது கலைத் துறையை உலகளவில் புகழ் பெறச்செய்து, தேசிய அளவில் பல விருதுகளை பெற்ற சூழல் – தி வோர்டெக்ஸ் தொடரின் இரண்டாவது சீசனில் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையாக மீண்டும் தோன்றி நடிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவது சீசனுக்காக மேலும் ஒரு ஆர்வத்தை தூண்டும் பரபரப்பான பொழுதுபோக்கு கதையை வடிவமைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி.. இருவரும் உண்மையிலேயே தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புரட்சிகரமான படைப்பாளிகள் . இதன் முதல் சீசன் மற்றும் அதில் நான் வெளிப்படுத்திய நடிப்பு இரண்டுக்கும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு உண்மையிலேயே மனதளவில் என்னை உற்சாகமடையச் செய்துவிட்டது, மேலும் அனைவரும் அதே அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக இரண்டாவது சீசனையும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கதிர் கூறினார்.
“சுழல் – தி வோர்டெக்ஸ் என் மனதுக்கு நெருக்கமான பெருமைக்குரிய மறக்கமுடியாத ஒரு படைப்பாக எப்போதும் நிலைத்திருக்கும். மேலும் தொடரின் முதல் சீசனில் எனது நடிப்பிற்காக ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பு மற்றும் பாராட்டுகளில் இருந்து இன்னும் நான் மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். தனது தங்கையைத் தேடிச் செல்வது தொடங்கி மறக்க நினைத்த நினைவுகளை சுமந்து மீண்டும் வாழ்க்கையை தொடர்ந்து தனக்கும், தன் சகோதரிக்கும் எதிராகச் செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்குப் பழி வாங்கியது வரையிலான நந்தினியின் பாத்திரத்தில் நடித்தது… நடிப்பது…. ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் பயணமாக எளிதில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. இரண்டாவது சீசனிலும் அந்த பயங்கரம் அவளை விட்டு விலகுவதாக இல்லை, அவள் மற்றொரு மர்மம் நிறைந்த கொடூரமான கொலைக்கு மத்தியில் தான் சிக்குண்டுள்ளதை காண்கிறாள். முதல் சீசன் உற்சாகமளித்ததாக, பார்வையாளர்கள் கருதியிருந்த நிலையில் இந்த இரண்டாவது சீசன் அவர்கள் எதிர்பாராத அளவு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். இது உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுவதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.