நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர் ஒருவர் காலமானதை அறிந்து தாமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு வந்துள்ளார் ஜெயம் ரவி,
சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை KK நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா. 33 வயதான அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் இந்த ராஜா. ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் தன்னால் இய்ன்ற பல நற்பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.
தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.