ராகுகாலம், எமகண்டம் எல்லாம் என்னோட டைட்டில்ஸ் – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாகிறது. புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “மழை பிடிக்காத மனிதன் நல்ல ஒரு தரமான படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறோம். விஜய் ஆண்டனி சார் கடமை உணர்ச்சியை பார்த்து நான் ஷாக் ஆகிட்டேன். மேக்கப் கூட கலைக்க நேரம் இல்லாமல் சொன்ன நேரஅமையும்” என்ு இந்த விழாவுக்கு  வந்திருக்கிறார். இந்த படத்தின் ஆரம்பம் முதல் இப்போது வரை மிகப்பெரிய ஆதரவு தந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி சார். விரைவில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது, எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள். இங்கு வந்த இயக்குனர் சசி சார், டி.சிவா சாருக்கும் நன்றி” என்றார்.

இயக்குனர் விஜய் மில்டன் பேசும்போது, “விஜய் ஆண்டனி போன்ற ஒரு நடிகர், அடுத்தடுத்து பிஸியாக இருந்தாலும் இந்த படத்துக்கு அவர் தந்து கொண்டிருக்கும் ஆதரவுக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். இசையமைப்பாளர் அச்சு இண்டர்வல், கிளைமாக்ஸ் ரெண்டு இடத்துலயும் ரெண்டு பாட்டு போட்டு படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் விட்டார். சமீபமாக கருடன், மஹாராஜா, கல்கி என நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. மழை பிடிக்காத மனிதன் அதை தொடரும் என நம்புகிறேன்” என்றார்.

வாழ்த்த வந்திருந்த தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “ட்ரைலர் சசி சார் படம் மாதிரி இருக்கும்னு நினைச்சேன், ஆனா மிஷ்கின் படம் மாதிரி இருக்கு. அப்படி ஒரு ஆக்‌ஷன் திரில்லரா வந்திருக்கு. சமீபத்தில் ஓடுற படங்களை பார்க்கும்போது நம்பிக்கை வந்தாலும், ஒரு பக்கம் மோசமான சூழலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்கிறார்கள். இங்கு அது நடக்கணும், தயாரிப்பாளர்களை வாழ வைங்க, அவங்க வீழ்ந்தால் அதை சுற்றி இருக்கும் சினிமா துறையே அழிந்து விடும். விமர்சனங்களில் கொஞ்சம் நியாயத்தை கடைபிடியுங்கள். ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க நீங்க தான் உதவணும். விஜய் ஆண்டனியின் திறமைக்கு அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். அவர் ஒரு நல்ல மனிதர், அவருக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்க வேண்டும். அது தமிழ் சினிமாவுக்கே நன்மையாக அமையும்” என்றார்.

வாழ்த்த வந்திருந்த இயக்குனர் சசி பேசும்போது, “இந்த ஹீரோவுக்கு இந்த மாதிரி கதை, இந்த ஹீரோவுக்கு இந்த மாதிரி பாடல்கள் போடணும் என்பது தான் சினிமாவில் பொதுவான விதி. ஆனால் விஜய் ஆண்டனி அதில் விதிவிலக்கு. நான் கதை சொன்ன அடுத்த நாளே தலைப்பு பதிவு செய்து விட்டேன் என்று சொன்னார் விஜய் ஆண்டனி. படம் துவங்கும் முன்பே பிச்சைக்காரன் என்ற தலைப்பை வைக்க எவ்வளவு தைரியம் வேண்டும். தலைப்பை மாற்றுங்க என பலரும் கமெண்ட் பண்ணாங்க. இந்த படத்தை பண்ணலாமா? வேணாமா? என்ற அளவுக்கு நான் யோசிக்க வேண்டியதாகி விட்டது. படம் ரிலீஸூக்கு பிறகு கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது. அந்த தலைப்பை வெறுத்தவர்களை தான் முதலில் திரும்பி பார்க்க வைத்தது. இந்த மழை பிடிக்காத மனிதன் படத் தலைப்பு எப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை வந்த எல்லா பாடல்கள், விஷூவல்ஸ் எல்லமே நன்றாக இருக்கிறது. இந்த மழை ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “நானும் விஜய் மில்டனும் 15 வருடங்களுக்கு முன்பே பார்ட்னர்ஸ். ஒரு ஒளிப்பதிவாளராக அவரின் திறமை அபதிமிதமானது. இயக்கத்தை விட்டு விட்டு ஒளிப்பதிவை மட்டும் அவர் செய்திருந்தால் இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக பெயர் வாங்கியிருப்பார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இயக்குனரும் கூட. இப்போது வரை சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். தயாரிப்பாளர் செலவை பற்றி கவலையே படாமல் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். நான் சத்யராஜ், சரத்குமார் சார் கூடலாம் நடிப்பேன் என்று நினைத்து பார்க்கவே இல்லை. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஜூலை இறுதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. எனக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் நம்பிக்கை இல்லை. நீங்க ராகு காலம்னு சொல்ற ஒரு நேரத்தை சொல்லுங்க, அந்த தேதியில் படத்தை துவக்கிக் காட்டுறேன். ராகுகாலம், எமகண்டம் எல்லாம் என்னுடைய தலைப்பு, அதை நான் இங்க ரெஜிஸ்டர் பண்ணிக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *